புதன், 10 நவம்பர், 2010

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரகாஷ் காரத்

“விக்டர் கீர்னனும் இந்திய இடதுசாரிகளும்” என்ற தலைப்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கடந்த அக்டோபர் 22ம் நாளன்று ஆற்றிய உரைக்கான குறிப்புகள்...





....விக்டர் கீர்னன் 1938 முதல் 1946 வரை இந்தியாவில் வாழ்ந்தவர். “அவருக்கு பெரிதும் மரியாதை பெற்றுத்தந்த ஆய்வுப் பொருளிலிருந்து எதிர்பாராத விதமாக இந் தியா அவரை பல ஆண்டுகள் வெளியே விலக்கி வைத்திருந்தது.” இது அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம், கீர்னனைப் பற்றிக் கூறியதாகும்.

நீண்ட காலம் அவர் இந்தியாவில் தங்கியி ருந்தது நமது அதிர்ஷ்டம் எனக்கூறலாம். அவர் இங்கு இருந்திராவிடில் இக்பால் மற் றும் பெய்ஸ் அகமது பெய்ஸின் படைப்புகள் முதன் முதலில் ஆங்கிலத்திற்கு அறிமுகப் படுத்தும் பணி நடைபெற்றிருக்காது. “இந் தியா குறித்து மார்க்ஸ்” போன்ற கட்டு ரைகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் அதனுடைய முதன்மைக் காலனியான இந் தியாவிற்குமான உறவுகள் குறித்த கட்டுரை களும் நமக்கு கிடைக்காமல் போயிருக்கக்கூடும்.

கீர்னன் இந்தியாவில் செலவிட்ட ஆண்டு கள் அனைத்துமே இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலமாகும். தேசிய விடுதலை உச்சகட்டத்தினை அடைந்ததும், தொடக்க நிலையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் சில பகுதிகளில் வேர்விடத் தொடங்கியதும் இந்தக் காலத்தில்தான். கீர்னன் இந்தியாவிலி ருந்து விடைபெற்ற ஓராண்டிற்குள்ளாகவே இந்தியா விடுதலை அடைந்தது. பாகிஸ் தானும் பிறந்து விட்டது.

1930களின் பிந்தைய ஆண்டுகளும், 1940 களின் தொடக்க ஆண்டுகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் முக்கியமான காலம் ஆகும். 1920ம் ஆண்டே கட்சி தொடங் கப்பட்டாலும் கூட, 1934-35ல் மீரட் சதிவழக் கில் கைதான தோழர்கள் விடுதலையான பின்னரே, கட்சி உண்மையில் செயல்படத் தொடங்கியது.

கட்சியின் தலைமையகம் பம்பாயில் செயல்படத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆன பின்னரே கீர்னன் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். விரைவிலேயே கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷியுடன் நட்பு கொண்டார்.

அந்தக்காலகட்டத்திலும், அதற்குப் பின்னர் வந்த 20 ஆண்டுகளிலும் கூட சில மையமான பிரச்சனைகளை சித்தாந்த ரீதியாக புரிந்து கொள்வதில் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளும், இடதுசாரிகளும் சிர மப்பட்டனர்.

பிரச்சனைகள் என்னவென்றால்,

இந்திய முதலாளிகளின் குணாம்சம் குறித்த வரையறை; அவர்களுக்கும் ஏகாதி பத்தியத்திற்குமான உறவு நிலைகள் (ஒத்து ழைப்பும், முரண்பாடுகளும்), நிலப்பிரபுக்க ளுடனான அவர்களது உறவு நிலை; நாடாளு மன்ற ஜனநாயகத்தில் கட்சி எந்த அளவு பங்கேற்பது என்பது குறித்த கேள்விகளும்; கட்சியின் கட்டமைப்பு குறித்த கேள்விகளும்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர் என்ற முறையிலும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற முறையிலும் இந்தப்பிரச்சனையினை குறித்து விக்டர் கீர்னன் அலசி ஆராய்ந்தார்.

இரண்டாவது உலகப்போரை ஏகாதி பத்திய போர் என்றே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க நிலையில் வரையறை செய்திருந்தது. அதை கீர்னன் கடுமையாக எதிர்த்தார். கட்சி 1939ல் சட்ட விரோதமாக ஆக் கப்பட்டது. உலகப்போர் சோவியத் யூனிய னுக்கு எதிராக மாறப்போவதையும், பாசிச அபாயம் குறித்தும் இந்தியாவிலுள்ள கம்யூ னிஸ்டுகள் உணரவில்லை என்பது அவரது விமர்சனம்.

அதற்குப்பின்னர் 1941 நவம்பர் மாதம் போரைக் குறித்த அணுகுமுறையில் முழுமை யாக நேர் எதிர்முனைக்குச் சென்று, அதை மக்கள் யுத்தம் என்று அழைத்ததையும் போருக்கு ஆதரவுஅளித்ததையும் அவர் விமர்சித்தார். நாஜிசத்துக்கும், ஜப்பானிய இராணுவக் கொள்கைகளுக்கும் எதிராக நடைபெற்ற உலகம் தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது சரியானதே. 1942 ‘வெள் ளையனே வெளியேறு’ இயக்கத்திலிருந்து கட்சி வெளியேறியது. காங்கிரஸ் தலைவர் களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கையினை எழுப் பியது. “வெள்ளையனே வெளியேறு” இயக் கத்தை எதிர்த்ததில் தான் கட்சி தவறு செய்து விட்டது. சர்வதேச முரண்பாட்டினையும் - அதாவது பாசிசத்திற்கெதிரான போராட்டத் தினையும் தேசிய முரண்பாட்டினையும்-அதா வது தேசிய விடுதலைப்போராட்டத்தினை யும், ஒன்றிணைப்பதில் கட்சி தவறிவிட்டது.

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை யிலான தேசிய இயக்கத்தின் பால் கம்யூ னிஸ்ட் கட்சி பல விதமான அணுகுமுறை களையும் உத்திகளையும் கடைப்பிடித்தது. பல்வேறு காலகட்டங்களில் இந்திய முத லாளிகள் குறித்த கம்யூனிஸ்ட் கட்சியின் புரி தலின் அடிப்படையிலேயே அவை அமைந்தன.

அன்றைய கட்டத்தில் கீர்னன் உட்பட மார்க்சிஸ்டுகள் எவரும், இந்திய பூர்ஷ்வாக் கள் பற்றி பெரிதும் கருத்தில் கொள்ளவில் லை. முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலை மைகளும், நிலப்பிரபுத்துவமும் கோலோச்சிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலனி நாட்டிலிருக்கும் தொடக்க நிலை முதலாளி கள் ஒரு ஆரோக்கியமான விரைவான முத லாளித்துவ வளர்ச்சிக்கு உதவப்போவதில் லை என்ற நிர்ணயிப்பே அதற்குக் காரணம்.

இந்தியா குறித்த கார்ல் மார்க்சின் நிர்ண யிப்புகளுடன் கீர்னனுக்கு வேறுபாடுகள் இருந்தன. “கடந்த காலம் என்ற பாரச்சுமை குறித்தும், கண்ணுக்குப் புலப்படாத பல தடை கள் குறித்தும் மார்க்ஸ் குறைத்து மதிப்பீடு செய்துவிட்டார். தடைகளை மீறி சமூகத் தினை மாற்றி விடும் சக்தி முதலாளித்துவத் திற்கு உண்டு என மார்க்ஸ் அதீதமான மதிப் பீடு செய்துவிட்டார். ஆனால், நடைமுறை யில், முதலாளித்துவமும் சரி, அதற்குப் பின் னர் வந்த சோஷலிசமும் சரி, ஸ்தல நிலை மைகள் ஏற்படுத்திய பின்னணியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்று அவர் கூறினார். (“ஏகாதிபத்தியமும், அதன் முரண் பாடுகளும்”-பக்.62)

‘இந்திய முதலாளிகளுக்கு போதிய தகுதி இல்லை. பெரிதாக எதையும் செய்வதற்கான துணிவோ, சக்தியோ எதுவுமில்லை’ என்று ஜவஹர்லால் நேரு கூறியதை மேற்கோள் காட்டிய கீர்னன் “இன்னும் 30 ஆண்டுகள் போனாலும் ஜோசியம் தான் இந்தியாவின் முக்கியமான தொழில்களில் ஒன்றாக இருக் கப்போகிறது” என பரிகாசம் செய்தார்.

ஆனால், வியக்கத்தக்க வகையில் இந்தி யாவில் முதலாளித்துவம் எல்லா வகையான நெளிவு சுளிவுகளோடும் விரைவாக விரி வடைந்து வருகிறது. இந்த முதலாளித்துவ வர்க்கத்தை ஒன்றுமில்லை எனக் கண்டு கொள்ளாமலிருப்பதும், குறைத்து மதிப்பிடு வதுமான மோசமான போக்கு கடந்த காலங் களில் இந்திய இடதுசாரிகள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட இன்றைய அதி தீவிர இடதுசாரிகள் இந்தப் போக்கின் இன்றைய பிரதிநிதிகளாய் இருக் கின்றனர்.

முதலாளிகளை வியந்து பாராட்டுவது, இடதுசாரிகளின் மத்தியில் உள்ள மற்றொரு போக்காகும். விடுதலைக்கு முன்பாக, கம்யூ னிஸ்ட் கட்சிக்குள் இடதுசாரி தேசியப் போக்கு ஒன்றும் இருந்திருக்காது. விக்டர் கீர்னனின் நண்பர்கள் சிலர் (அதில் சிலர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்றவர் கள்) கட்சிக்குள் இத்தகைய உணர்வு நிலை யினைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தனர். தேசிய முதலாளிகளையும் அவர்கள் தலை மை தாங்கும் தேசிய இயக்கத்தினையும் ஒரு முற்போக்கு நிகழ்வாக பார்க்கும் வழக்கும் அவர்களுக்கு இருந்தது. விடுதலைக்குப் பின்னர் “முற்போக்கு தேசிய பூர்ஷ்வா”க்களு டன் இணைந்த கூட்டணியாக மாற முடியும் என்ற அடிப்படையில் இடதுசாரிகளின் ஒரு பகுதி செயல்படத் தொடங்கியது. இது ஒரு வகையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாகும்.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்துடன் இந்திய பூர்ஷ்வாக்களுக்கு ஒருபுறத்தில் உள்ளார்ந்த முரண்பாடுகள், மறுபுறத்தில் ஒத்துழைப்பு என்ற அவர்களின் இரட்டைத் தன்மையினை அங்கீகரிப்பதற்கு கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 40 ஆண்டுகள் பிடித்தது. நவீன-தாராளவாதச் சூழலில், இந்திய முதலாளி வர்க்கம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. ஒரு காலத்தில் குறைத்து மதிப்பிடப்பட்ட அதன் உள்ளார்ந்த சக்தி இன்று பிரம்மாண்டமாக வெளிப்பட்டிருக் கிறது. அதேவேளையில், விக்டர் கீர்னன் கூறுவது போல, “உள்நாட்டுப் பின்னணி” யால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் முதலா ளித்துவமாகவும் அது உள்ளது.

‘ஏகாதிபத்தியமும் அதன் முரண்பாடு களும்’ என்ற தனது புத்தகத்தில், இந்தியா வின் முதலாளித்துவ வளர்ச்சி குறித்து கீர் னன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “கூடு தலாக, விவசாயத்திலும், தொழிலிலும் குறிப் பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், தனக்கே உரித்தான சமூக அமைப்பிலிருந்து தன்னை முழுமையாக வெட்டிக்கொள்ளவில்லை. எனவே, தற் போதைய சமூகக் கட்டமைப்பினால் தீர்க்க இயலாத பிரச்சனைகளையும் அது சந்திக் கிறது. (பக்.134)

இந்திய முதலாளித்துவ வர்க்கம் குறித்து ஆய்வு இன்று அவசியமாகிறது. இந்திய பூர்ஷ்வாக்களைப் பற்றிய மார்க்சிய ஆய்வு இன்று வரையிலான அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண் டும். இங்கு அமர்ந்திருக்கும் சான்றோர்கள் பலர் அதைச் செய்வார்கள் என நம்புகிறேன். இந்திய சமூகத்திற்கே உரித்தான சில பாகு பாடுகள், சாதிய, பழங்குடி இன, பாலின ஒடுக் குமுறைகளில் அவை பிரதிபலிக்கின்றன. குறிப்பிட்ட பிரதேசங்கள் சுதந்திரம் மற்றும் வளர்ச்சியிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் இந்தியாவின் வர்க்க கட்டமைப்பின் மீதும், சமூக படிநிலை மீதும் எத்தகைய செல்வாக் கினைச் செலுத்துகின்றன. ஒன்றையொன்று எவ்வாறுஇணைக்கின்றன என்பதை சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் புரிந்து கொள்வதற்கு அத்தகைய ஆய்வுகள் உதவும்.

இப்போதும் கூட எங்கெல்லாம் முன்பு போராட்ட இயக்கங்கள் நடைபெற்றனவோ, அந்தப்பகுதிகளில் அல்லது அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு ஆதரவு கிடைத்து வருகிறது. 1941 முதல் 1948 வரை காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், கிராமப்புற சுரண்டலுக்கு எதிராகவும் வரலாற்று ரீதியான இரண்டு முக்கிய நீரோட்டங்கள் இருந்தன. அந்த நீரோட்டங்களின் வெற்றிகரமான போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி தலை மை தாங்கிநடத்தியது. இவ்வாறு, ஏகாதிபத் தியத்திற்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் எதி ரான போராட்டங்களை இணைத்து அதற்கு தலைமை தாங்கி நடத்தியதால் கட்சிக்கு வெகுஜன ஆதரவு கிடைத்தது. தெபாகா இயக்கம் (வங்கம்), வடக்கு மலபார் (கேரளா), ஆதிவாசிகள் போராட்டம் (திரிபுரா) மற்றும் தெலுங்கானா போராட்டங்கள் இவ்வகைப்பட் டவையாகும்.

கீர்னன் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பராக வும் ஆதரவாளராகவும் இருந்தவர். அதே வேளையில், கட்சியின் அன்றைய பலவீனங் களைச் சுட்டிக்காட்டி, விமர்சனப் பூர்வமான ஆய்வினை செய்வதற்கும் அவர் தயங்கிய தில்லை. பம்பாய் நகரில் கட்சியின் தலைமை யகத்திற்கு அடிக்கடி வருகை தந்த கீர்னன், கட்சியின் தலைவர்களுக்கும், ஊழியர்களுக் கும் சித்தாந்த அறிவினைப் பெறுவதில் அன்று இருந்த பலவீனத்தைப் பற்றி கவலை தெரிவித்தார். எல்லாரும் நடைமுறை வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந் தனர். ஆனால், தத்துவக் கல்வியில் கவனம் செலுத்தாது இருந்தனர். சித்தாந்தக் கல்வி என்பது, காஃபி விடுதிகளில் இருந்து கொண்டு சில அறிவுஜீவிகள் எல்லையற்ற வேதாந்தம் பேசிக்கொண்டிருப்பது போன்று ஆகிவிடக்கூடாது என நினைத்தோ என் னவோ, தத்துவ அறிவை வளர்த்துக் கொள் வதில் கம்யூனிஸ்டுகள் அன்று ஆர்வம் காட்டவி ல்லை.

“இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு தடவை கூட அவர்கள் சித்தாந்தப் பிரச்சனைகளை விவாதித்ததாக நான் கேள்விப்படவில்லை.” என அவர் கூறினார். தலைமையகம் குறித்து அவர் கூறிய கருத்து ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டி களத்தில் இறங்கிப் போராடிய கம்யூனிஸ்டுகள் மத்தி யில் சித்தாந்தம் மற்றும் நடைமுறை குறித்த அம்சங்கள் வேர்விடத் தொடங்கிவிட்டன. “கேரளாவின் தேசிய இனப் பிரச்சனை” என்ற தலைப்பில் சித்தாந்த அடிப்படையில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு எழுதிய புத்தகம் இதில் ஒரு எடுத்துக்காட்டாகும். வரலாற்றி யல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை யில் கேரள சமூகத்தை அவர் அதில் ஆய்வு செய்திருந்தார். எனினும் இந்தியாவில் கம்யூ னிஸ்ட் இயக்கத்திற்கு சில குறிப்பிட்ட இடங் களில் மட்டுமே பல கோடி மக்கள் கொண்ட ஆதரவுதளங்கள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற மூன்று மாநிலங்களில் மட்டும் 12 கோடி மக்கள் உள்ளனர். நாடாளுமன்ற முறை யில் கம்யூனிஸ்டுகள் சிறந்த அனுபவம் பெற்றிருக்கின்றனர். இந்த அனுபவங்களின் பயனாக சோஷலிச அமைப்பிலும் கூட பல கட்சி ஆட்சி முறையில் இயங்க முடியும் என சித்தாந்த ரீதியான முடிவிற்கு வந்திருக்கின்றனர்.

பிற்காலத்தி ல் விக்டர் கீர்னனே எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில், கடந்த கால கம்யூ னிஸ்ட் கட்சி பற்றி தான் சற்று கடுமையாக விமர்சித்துவிட்டதாக கூறியிருக்கிறார். அந் தக் காலத்தில் தலைவர்கள் மற்றும் ஊழி யர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் குறித்து வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார். அவர் இங்கு இருந்த 1940ம் ஆண்டுகள் கம்யூ னிஸ்டுகள் மக்கள் மத்தியில் பணியாற்றி, தொழிலாளர்களைத் திரட்டிப் போராடி மக த்தான தியாகங்களைப் புரிந்த காலமாகும். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பென் பிராட்லி (இவ ரைப் பற்றி முந்தைய அமர்வில் குறிப்பிட்டி ருக்கிறேன்) உள்ளிட்ட பலரும் பல ஆண்டு கள் சிறையில் கழித்த காலம் இது. மீரட் சதி வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்க ளுடன் பென் பிராட்லியும் சிறையில் அடைக் கப்பட்டார்.

இன்றைய இந்தியாவில் இடதுசாரிகள்

கிராமப்புற வறுமையினைப் போக்குவ தற்கு மிகவும் அவசியமான நிலச் சீர்திருத் தங்களுக்காக இன்றளவும் கம்யூனிஸ்டுகள் தங்களது போராட்டத்தினைத் தொடர்கிறார் கள். அந்த வகையில் 1940களில் நிலம் கோரி கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய போராட்ட நிகழ்ச்சி நிரல் இன்னும் தொடர்கிறது. சுரண் டல் தன்மை கொண்ட நில உறவுகளுக்கு எதிரான போராட்டம் நிலப்பிரபுத்துவத்தினை எதிர்த்த போராட்டம் மட்டுமல்ல. சாதிய, சமூக மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக் கும் எதிரான போராட்டமுமாகும்.

நவீன - தாராளவாத முதலாளித்துவம், சுரண்டலை தீவிரப்படுத்துவதுடன், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கூர்மைப்படுத் தியிருக்கிறது. போர்பஸ் மேகசீன் தகவலின் படி, 2009ல் இந்தியாவில் இருந்த டாலர் பில்லியனர்களின் (சுமார் ரூ.4,500 கோடி சொத்து உள்ளவர்கள்) எண்ணிக்கை 52. இன்று 2010ல் அந்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்திருக்கிறது. புராதன கால மூலதனக் குவிப்பு வடிவங்கள் கூட இன்று வெளிப்பட்டு வருகின்றன. நவீன தாராளவாதக் கொள்கை களுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கை களுக்காகவும் இடதுசாரிகள் இன்று போராடி வருகின்றனர்.

வகுப்புவாத அரசியலையும், சாதி அடிப் படையிலான அடையாள அரசியலையும் எதிர்த்து, மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவீன - தாராளவாதக் கொள்கைகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றத்தினை ஏற்படுத்திவிட்டன. அமெரிக் காவுடன் இந்திய ஆளும் வர்க்கங்கள் ஒரு கேந்திரக் கூட்டணியினை உருவாக்கிவிட் டன. உள்நாட்டுக் கொள்கைகளிலும் இது பிரதிபலிக்கிறது. இவ்வாறு அமெரிக்கா வினை மென்மேலும் சார்ந்து நிற்கும் கொள் கைகளுக்கு எதிராக, இந்திய நாட்டின் நலன் களுக்கு உகந்த சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளுக்காக இடதுசாரிகள் போராடி வருகின்றனர்.

விக்டர் கீர்னனின் 90வது பிறந்த நாளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டோம். அடுத்த ஆண்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இடதுசாரிகள் இணைந்து, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகிய பெய்ஸ் அகமது பெய்ஸின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட உள் ளோம். அந்த வேளையில் கீர்னன் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த பெய்ஸின் கவிதைகளை வெளியிட முடிவு செய்துள்ளோம். ஏற்கெ னவே அவை அச்சில் இல்லாததால், அவற் றைத் தொகுத்து வெளியிட வேண்டியுள்ளது. இந்தியாவின் நண்பரான விக்டர் கீர்னனை இந்தியத் துணைக் கண்டத்தின் இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

-தமிழில் : இ.எம்.ஜோசப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக