புதன், 10 நவம்பர், 2010

தொழிற்சங்க போராட்டமும்- வரலாறு கூறும் பாடமும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.

முதலாளித்துவ சமூகத்தில் உழைப்புக் கும், மூலதனத்திற்கும் இடையிலான முரண் பாடு தவிர்க்கமுடியாதது. மூலதனத்தால் ஒட்டச் சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட முன்வருகிறார்கள். இதற்கு தலைமை தாங்குவது, வழிநடத்துவது, வர்க்க உணர்வுள்ள தொழிற்சங்கங்களின் தலையாய கடமையாகும்.

இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராய பிரிட்டிஷ் அரசு கமிஷன் ஒன்றை அமைத்தது. ராயல் கமிஷன் ஆப் லேபர் என் றழைக்கப்பட்ட இந்த கமிஷனின் நடவடிக் கைகளை புறக்கணிக்க வேண்டுமென்று ஏஐடியுசி பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தக் கமிஷன் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அமைக்கப் பட்டதால்தான் ஏஐடியுசி அதை எதிர்த்தது.

ஆனால் இந்த முடிவை எதிர்த்து பின் னாளில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி உள்ளிட்ட சில தலைவர் கள் வெளிநடப்பு செய்தனர். அவ்வாறு வெளி யேறிய அவர்கள் தனி அமைப்பை உரு வாக்கியதோடு, அறிக்கை ஒன்றையும் வெளி யிட்டனர். ஏஐடியுசி அரசுக்கு எதிராக வர்க்க போராட்டத்தை தூண்டிவிடுகிறது என்றும், இது ஒரு தொழிற்சங்கத்தின் வேலையல்ல என்றும் அவர்கள் கூறினர். மேலும் 1928-29களில் தொழிற்சங்க இயக்கத்தில் பல் வேறு குழப்பங்களும் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் 1929ம் ஆண்டு நடைபெற்ற ஏஐடியுசி மாநாட்டிற்கு தலைமைப் பொறுப் பேற்ற தலைவர் இவர்களுக்கு பதிலளித்து பேசுகையில் கீழ்க்கண்டவாறு கூறினார்.

“முதலாளித்துவ சமூகத்தின் கருப்பை யிலேயே வர்க்கப் போராட்டத்திற்கான கரு அமைந்துள்ளது. வர்க்கப் போராட்டத்தை பிரச்சாரம் செய்கிறோம் என்றும், வர்க்கங் களுக்கிடையேயான தூரத்தை மேலும் விரிவுபடுத்துகிறோம் என்றும் நம்மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. முத லாளித்துவத்தின் காரணமாகவே இந்த தூர மானது விரிவானதாக இருக்கிறது... சோச லிஸ்ட்டுகள் அல்லது கம்யூனிஸ்ட்டுகள் தான் வர்க்கங்களாக பிரிந்து அவற்றிற் கிடையே கசப்புணர்வை பிரச்சாரம் செய் கிறார்களா? அல்லது தனது கொள்கை, முறை ஆகியவற்றின் மூலம் மனித குலத்தில் பெரும் பகுதியினரை பழங்காலத்தில் இருந்த அடிமைகளை விட பல வகையில் மோசமான நிலையில் உள்ள கூலி அடிமைகளாக மாற்றி யது முதலாளியின் ஏகாதிபத்தியம் அல்லவா? இந்த வர்க்கப் போராட்டம் என்பது நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவம் நீடிக்கும் வரையில் அது வும் நீடிக்கவே செய்யும்... வர்க்கப்போராட்டம் இருந்து வந்துள்ளது. இன்றும் நீடிக்கிறது. நெருப்புக் கோழி மணலில் தலையை புதைத் துக் கொள்வது போல் அதை ஒதுக்கிவிடு வதன் மூலம் அதிலிருந்து நாம் விடுபட்டுவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் அகற்றுவதன் மூலம் மட்டுமே நம்மால் அமைதியைக் கொண்டுவர முடியும்”

இவ்வாறு மாநாட்டில் பெருமைமிகு தலைமை உரையாற்றியவர் வேறுயாருமல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தான்.

ஆனாலும் அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர் போராட்டங்களை இத்த கைய கண்ணோட்டத்தில் அணுகினார் என்று கூறமுடியாது. அவர் தலைமை தாங்கிய வர்க் கத்தின் நலன்களுக்கு ஏற்பவே செயல்பட்டார்.

இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் தொழில் அமைதியை கெடுக்கிறார்கள் என்றும், போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என் றும், முதலீடு வருவதை முடக்குகிறார்கள் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர் களுக்கு நேரு அன்றைக்கு கூறிய பதில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பொருந்தும்.

பின்னாளில் காங்கிரஸ்காரர்கள் கம்யூ னிஸ்ட்டுகள் போராட்டத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டிய பொழுது, திராவிட முன்னேற் றக்கழகத்தின் தலைவரான அண்ணா அவர் கள் தனக்கே உரிய பாணியில் “பணத் தோட்டம்” நூலில் இவ்வாறு பதிலளித்தார்.

“காங்கிரஸ் கட்சியினர் தொழிலாளர் களிடம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உள்ள தொடர்பை போட்டியிட்டோ, பிரச்சாரம் மூலமோ அடக்குவதன் மூலமோ துண்டித்து விடக்கூடும்- துண்டிக்கப்படுவது அத்த னையும் அழிவதில்லை. துளிர்ப்பதுண்டு... வெட்ட வெட்ட சுரப்பதும்... அரைக்க அரைக்க மணப்பதும்-துண்டிக்க துண்டிக்க துளிர் அதிகம் விடுவதுமாகப் பல இயற்கை நிகழ்ச் சிகள் உண்டு. துண்டிக்கவே முடிகிறது என்று கொண்டாலும், தொடர்பை போக்கி விடுவதால் பிரச்சனையை போக்கிவிட முடியாது. கம்யூனிஸ்ட்டுகளை தொழிலாளர் களிடமிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் காரர்களைக் கொண்டு தொழிலாளர் இயக்கத்தை நடத்தச் சொன் னாலும் மூலம் கெட்டுவிடப்போவதில்லை. காங்கிரஸ்காரர் அந்த முனையில் வேலை செய்ய ஆரம்பித்த சில காலத்திற்குப் பிறகு தொழிலாளர் பிரச்சனையை நேரடியாக கவனிக்கத் துவங்கியதும் தனது வெள்ளைச் சட்டை காவியேறி சிவப்பாகி விடுவதைக் காண்பார்கள்; அதாவது அவரும் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவார். கோவை வேலை நிறுத்தத் துவக்கத்தின் போதே ஆலைக்காரர்கள் தமது அறிக்கையிலே என்ன கூறுகின்றனர்? கம்யூ னிஸ்ட்டுகள் மீது என்ன கூறுவார்களோ வழக்கமாக, அதே குற்றச்சாட்டுத் தான். “தகராறு கிளப்புகிறார்கள்; தூண்டிவிடு கிறார்கள்; பலாத்காரச் செயலில் ஈடுபடு கிறார்கள்; உருட்டல் மிரட்டல் செய்கிறார்கள்.” இவைகளை எல்லாம் செய்வதாகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது குற்றம்சாட்டினர். கோவையிலே ‘ஸ்டிரைக்’ நடத்தும், தொழிற்சங்கத்தாருக்கும் இதேதான். முத லாளிமார் அறிக்கை மூலம் அர்ச்சனை நடக்கிறது. அது மட்டுமா!இல்லை! கம்யூ னிஸ்ட்டுகளை விட இவர்களே மோசமான முறை களில் நடந்துகொள்கிறார்கள்-என்று குறை கூறுகிறார்கள் முதலாளிமார்கள்.

“ஐவ ளை அடிளவ ரகேடிசவரயேவந வாயவ வாந ருniடிn டநயனநசள iளேவநயன டிக உசநயவiபே ய உடிபேநnயைட யவஅடிளயீாநசந உடினேரஉiஎந வடி ய ளநவவடநஅநவே ளாடிரடன நெ சநளடிசவiபே வடி iவேiஅனையவiடிn. ஏiடிடநnஉந யனே டிவாநச வயஉவநைள றாiஉா யசந றடிசளந வாயn வாடிளந யனடியீவநன லெ வாந உடிஅஅரnளைவள...”- (இந்து 13-2-47, 4ம் பக்கம்)

இப்படித்தான் நிலைமை எழும். வேலை நிறுத்தத்தை யார் நடத்தினாலும் குற்றச் சாட்டு இதுவாகத்தான் கூறப்படும்! பிள்ளை யார் சுழி போட்டுப் புதுக்கணக்குத் துவக்கும் போதே, ஆலை அரசர்கள், இந்த வாசகத்தை கொட்டை எழுத்திலே எழுதி வைத்துவிடு வர். நாட்டிலே யார் தொழிலாளர் பிரச்சனைக் காக வேலை செய்தாலும் இந்த ஏட்டை எதிரிலே நீட்டுவர்”

இன்றைக்கு தமிழகத்தில் துவங்கப்பட் டுள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தொழி லாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். இதை எதிர்த்து போராடும் அவர்களுக்கு சிஐடியு தலைமை தாங்குகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் ஏதோ தொழில் அமைதி பூத்துக் குலுங்குவது போலவும், மார்க்சிஸ்ட்டுகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு அதை கெடுப்பவர்கள் போலவும் சித்தரிப்போரின் சிந்தனைக்கு பண்டித நேருவும், அறிஞர் அண்ணாவும் முன்வைத்த கருத்துக்களையே சமர்ப்பிக்கிறோம்.

ஹூண்டாய், பாக்ஸ்கான் போன்ற பன் னாட்டு நிறுவன ஆலைகளில் குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள் கூட மறுக்கப்படு கின்றன. ஆலை வாயிலில் கொடியேற்றுவது கூட குற்றம் என கூறப்பட்டது. மேலும் சுரண்டலுக்குள்ளாகும் தொழிலாளர்கள் தன் னெழுச்சியாக போராட முன்வருகிறார்கள். அவர்களுக்கு சிஐடியு தலைமை தாங்குகிறது.

குறிப்பாக ஹூண்டாய், பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தில் பல் வேறு கள அனுபவங்கள் கிடைத்துள்ளன. வேலைநீக்கம், இடைநீக்கம், சட்டவிரோத சம்பள வெட்டு, பொய் வழக்கு, சிறை, கை விலங்கு என அடக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது. போராட்டங்களின் மூலமாகவும், நீதிமன்றங்களின் வாயிலாகவும் அநீதி களுக்கு எதிரான போராட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டியுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்தத் தொழி லாளர்கள் 13ஆயிரம் பேர் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து போராடினார்கள். அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. பந்த் உள்ளிட்ட போராட்டம் மூலம் பொதுமக்களும், அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஹூண்டாய், பாக்ஸ்கான், நெய்வேலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைத்தும், மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனமான என்.எல்.சி. தொழிலாளர் போராட் டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கவும் பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு ஆலை களில் குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமை கள் கூட மறுக்கப்படுவதன் அபாயத்தை எடுத்துரைக்கவும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நானும் சிஐடியு பொதுச்செய லாளர் தோழர் அ.சவுந்தரராசனும் சந்தித்தோம்.

அடக்குமுறைகளை எதிர்த்தும் நடை பெற்ற போராட்டங்களில் ஜனநாயக எண் ணம் கொண்ட அனைத்து தொழிற்சங்கங் களும் பங்கேற்றன. இதன் மூலம் பரந்துபட்ட தொழிற்சங்க ஒற்றுமை உருவாகியது. மாநில முதல்வர் தலையீட்டால் நெய்வேலி உடன் பாடு ஏற்பட்டது நல்ல விஷயமாகும்.

மேலும், ஹூண்டாய், பாக்ஸ்கான் தொழி லாளர்களுடைய நியாயமான கோரிக்கை களை பேசித்தீர்க்க முதல்வர் உத்தரவிட் டுள்ளார். அரசு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்.

மேற்குவங்கம், ஆந்திரம் போன்ற மாநி லங்களில் உள்ளதைப்போல் தமிழ்நாட்டிலும் தொழிற்சாலையில் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க ஒரு சட்டம் தேவைப்படுகிறது. அதனுடைய அவசியத்தை முதல்வரிடம் வலியுறுத்தினோம். முதல்வரும் அதை பரிசீலிப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளார். இச்சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம்.

தொ.மு.ச. ஏற்கனவே ஒரு உடன் பாட்டிற்கு வந்தபோதும் என்.எல்.சி. தொழி லாளர்கள் அதை ஏற்கவில்லை. இந்த யதார்த் தத்தை முதல்வரும் உணர்ந்ததால்தான் பிரச் சனையில் தலையிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த பின்னணியில் தமிழக முதல்வரின் தலையீட்டின் காரண மாக என்.எல்.சி. தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது பாராட்டத் தக்கது. அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர் களையும் நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் தலையீடு தொடர்ந்து தேவைப்படுகிறது.

தொழிலாளர்கள் இன்றி தொழில் வளர்ச்சி இல்லை. தொழிலாளர்களின் உரிமைகள் பாது காக்கப்படும்போது தான் தொழில் அமைதி யும் பாதுகாக்கப்படும். கம்யூனிஸ்ட்டுகள் தொழில் வளர்ச்சியிலும், தேசத்தின் வளர்ச்சி யிலும் அக்கறை கொண்டவர்கள். அதே நேரத் தில் தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்ட வர்கள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக