செவ்வாய், 21 டிசம்பர், 2010

இந்தியக் கல்வி ஓர் இமாலய தோல்வி -ஜோ.ராஜ்மோகன்

இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு கல்விக்கான அபரிமிதமான தேவை ஏற்பட்டுள்ளது. இந் திய சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி அனைத்தும் கல்வி பெறும் மாணவர் களோடு பின்னிப்பிணைந்துள்ளது.

கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு நாட்டின் முன்னேற்றத்தை வளர்த்து எடுப்பதற்கு பதில் உலக வங்கியும். சர்வதேச நிதி நிறுவனமும் கொடுக்கும் நிர்ப்பந்தத்தால் தொடர்ந்து ஆட்சியாளர்கள் உலகமய, தனியார் மய, நவ தாராளமயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமலாக்குவதால், கல்வி என்பது நடப்பில் முழுவதும் வியாபார மாக்கப்பட்டுள்ளது,

நம் நாட்டில் கல்வி என்பது அனைவருக் கும் கிடைக்க வேண்டும், கல்விதான் ஒட்டு மொத்த பரந்த வளர்ச்சிக்கு அடிப்படை என் றும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள் ளது. கல்விதான் பொருளாதாரத்தின் பல தளத் திற்கும் தேவைப்படும் பயிற்சி பெற்ற மனிதர் களை உருவாக்கித் தருகிறது. கல்வி மட் டுமே ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அடிப் படை; கல்விதான் நாம் நமது சொந்தக்காலில் நிற்பதற்கு பலமளிக்கும்; நமது சுயசார்பை மேலும் வலுப்படுத்தும்; ஒட்டுமொத்தமாக சுருங்கச் சொன்னால் கல்வி மட்டுமே நாம் நமது நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கையுடன் செய்யும் ஒரு அற்புதமான முதலீடாகும், கல்வி மட்டுமே அறிவையும் திறனையும் எங்கும் பரவச் செய்து உண்மையான தேச வளர்ச்சிக்கு உத வும். ஆகவே கல்வி என்பது நமது வாழ்வாதா ரத்திற்கே ஒரு முக்கியமான அம்சமாகும்.

இந்தியா சுதந்திரமடைந்து 64 ஆண்டு களை கடந்து வெற்றி விழாக்கள் கொண்டா டும் நிலையில் ஆட்சியாளர்கள் கடைப்பிடிக் கும் பொருளாதார கொள்கைகளால் கல்வி கொடுப்பதில் இந்தியா இமாலய தோல்வி அடைந்துள்ளது. இதன் விளைவு, உலகின் மனித வள மேம்பாட்டில் 182 நாடுகளில் இந்தியா 134-வது இடத்தில் உள்ளது.

உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு பெரும் ஏற்றத்தாழ்வு உள்ள சமுதாயத்தில் ஒவ்வொரு பொருளாதார மட்டத்திற்கும் ஒருவகைப்பட்ட பள்ளிக் கல்வி என்பதும். கொடுக்கும் விலைக்கேற்ப கிடைக்கும் கடைச்சரக்காக கல்வி மாற்றப்பட்டதும் மேலும் சமூக நிலையை மோசமடைய வைத்துள்ளது. இத்தேசம் வறுமையிலிருந்து மீள்வதற்கு ஒரேவழி கல்விதான். ஆனால் தரமான கல்வி மறுக்கப்படுவதால். மேலும் வறுமை நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.

ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவ மான சமூகம் உருவாக கல்வி மிக முக்கிய மான கருவியே அல்லாமல் ஏற்றத்தாழ்வு களை நிரந்தரப்படுத்தும். அவற்றை நியாயப் படுத்தும் நிலைதான் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் மிக மோசமான பொருளாதார கொள்கை குறிப்பாக 1986-ல் உலக வங்கியின் வழிகாட்டுதலோடு உரு வாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை மற் றும் கல்விக்கான செலவுகள் முழுவதுமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தலை யில் சுமத்துவதும் கல்விக்கான அரசின் மானி யங்களை படிப்படியாக குறைப்பதும் கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத் தவும் கல்வியை வணிகமயமாக்கவும் வழி வகுத்தது போன்ற நடவடிக்கைகள் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. இதனால் இன்றைக்கும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே குறிப்பாக பெண்கள் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய தலித் மக்கள் உயர்கல்வி பெறுவதென்பது இன்று பெரும் சவாலாக உள்ளது.

கல்வி வியாபாரத்திற்கு அடித்தளமிட்ட தீர்ப்புகள்:-

1993-ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, கல்வி அடிப்படை உரிமை என்று கூறியது, பின்பு 2002-ஆம் ஆண்டு டி.எம்.எ. பாய் பவுண்டேஷன் மற்றும் கர்நாடக அரசு வழக்கில் பதினோரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல மைப்பு பெஞ்சின் பெரும்பான்மையானவர்கள் ஒரு தீர்ப்பை கொடுத்தார்கள், அதன்படி அத் தீர்ப்பு தனியார் கல்வி நிறுவனங்கள் இலாப வேட்கையை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படக்கூடாது என்று சொன்ன அதே வேளையில், நிறுவனத்தை வளர்த்தெடுப்ப தற்கும் கல்வி வசதிகளை செய்து கொடுத்த லுக்கும் நியாயமான ஒரு உபரியை ஈட்டுவது என்பது லாபம் என எடுத்துக்கொள்ள முடி யாது என்று கூறியது. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை கட்டுக் குள் வைத்திருப்பதும் மாணவர்கள் சேர்ப்பு குறித்த கட்டுப்பாடுகளை உருவாக்குவதும் நியாயமான உபரியை சம்பாதிப்பதும் எங்கள் உரிமை என்று தனியார் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன. இப்படி இவர்களின் வசதிக்கு ஏற்றவாறு இத்தீர்ப்பை திரித்துக்கூற ஆரம் பித்தனர்.

அதேபோல் 2005-ல் கடந்த பி.ஏ. இனாம்தர் மற்றும் அன்ருக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் நடந்த வழக்கில் ஏழுபேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பு, அரசு உதவியற்ற தனியார் கல்வி நிறு வனங்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சொன்னது. ஆனால் இதை பயன்படுத்திக்கொண்டு லாபம் மட் டுமே நோக்கமாக தனியார் கல்வி நிறுவனங் கள் முறையற்ற கட்டண வசூலில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற தீர்ப்புகள் கல்வியை முழு வதுமாக வர்த்தகமாக்க நீதிமன்றமே உடன் பட்டுவிட்டது என்றுதான் பொருள், இதற்காக முழுப்பொறுப்பு அரசுகள் கல்வி கொடுக்கும் பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விலகி நிற்பதுதான் அன்றி வேறல்ல.

மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளிலும் இலா பம். இலாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னணியில், தனியார் கல்வி நிறுவனங்கள் இலாபம் மட்டும்தான் நோக்கமாக கொண்டு செயல்படுவதோடு மேலும் கல்வி வியா பாரத்தை தீவிரப்படுத்தி முதலீடுகளை பெருக்கிக் கொண்டு மேலும், மேலும் பெறும் கல்வி தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன.

கல்வித்துறையில் தனியார் பங்களிப்பு பெருகியுள்ள போதிலும். இந்தியாவில் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வில்லை என்பதுதான் உண்மை. தனி யார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல் கலைக்கழகங்கள், தனியார் சுயநிதி கல் லூரிகள் இலாபம் ஒன்றை மட்டுமே நோக்க மாக கொண்டு செயல்படுகின்றன. மறுபுறம், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு முதுகெலும்பு இல்லாமல் போதுமான அடிப்படை கட்ட மைப்புகள் இல்லாமல் உள்ளன. தொடர்ந்து கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கூடாது என்பதில் அரசுகள் தீர்மானகரமாக உள்ளன.

2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கல்விக்கான நிதியை 6 சதவிகி தம் ஒதுக்குவதாக ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்றுவரை கல்விக்கான ஒதுக் கீட்டை உயர்த்துவது குறித்து அரசுக்கு எந்த திட்டமும் இல்லை. தற்போது 3.5 சதவி கிதம் கல்விக்கு அரசு ஒதுக்கும் நிதியாக உள் ளது. இதிலிருந்து நாட்டின் கல்வி குறித்து அர சின் அக்கறையின்மையை பார்க்க முடியும்.

இந்நிலையில் அரசு உயர்கல்வியில் அந்நிய முதலீட்டை நேரடியாக அனுமதித்து அந்நிய பல்கலைக்கழகங்களை இந்தியாவிற் குள் அனுமதிக்க துடித்துக்கொண்டுள்ளது. இதனால் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடையற்ற வகையில் கல்விச் சந்தை யை உருவாக்கி இந்திய உயர்கல்வியை சீர ழிப்பதோடு இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வேலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்து வருகிறது.

நீண்ட காலத்திற்கு பிறகு 2009 கல்வி உரி மைச் சட்டம் நிறைவவேற்றப்பட்டாலும் ஏட் டளவிலான சட்டமாகத்தான் இருக்கப் போகின்றன. 6 வயது முதல் 14 வயது வரை மட்டும்தான் கட்டாயக் கல்வி என்று அறி வித்துள்ளது. மழலையர் கல்வி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கல்வி முழுமையாக விடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு குறித்து உறுதியான அறிவிப்பு இல்லாதது போன்ற ஏராளமான ஓட்டைகள் நிரம்பிய சட்டமாக இருக்கப்போகிறது.

கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடக் கோரியும் அரசு கல்வி நிலையங்களை மேம்படுத்தக் கோரியும் கல்வி வியாபாரத்தை தடுக்கக் கோரியும் இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் சமச்சீர்க் கல்வி, மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட் டத்திற்கு பின்பு அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்வியாளர் ச.முத்துக்குமரன் கொடுத்த பரிந்துரையில் ஒரே வகையான பாடத்திட்டத்தை தவிர மற்ற அனைத்து பரிந் துரைகளும் குழிதோண்டி புதைக்கப்பட்டுள் ளது. சமச்சீர் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை கற்பிக்க முயற்சிக்கிறது. தமிழக அரசு, தனியார் பள்ளிகளின் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் உறுதி யற்ற அரசாக உள்ளது. இந்த அரசுகளின் வர்க்க குணத்தால்தான் இந்தியாவில் கல்வி மிகப்பெரும் வியாபாரமாக்கப்பட்டு, எல்லோ ருக்கும் கல்வி என்பது கிடைக்காமல் இமா லய தோல்வி அடைந்துள்ளது.

கட்டுரையாளர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக