செவ்வாய், 21 டிசம்பர், 2010

மீனவர்களை அகதிகளாக்கும் அறிவிப்பாணை -வீர.அருண்

வரைவு கடலோர ஒழுங்கமைவு மண்டலம் அறிவிப்பாணை, மீனவ மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் வளங் களுக்கும் சாவுமணி அடிக்கும் அறிவிப்பாணையாகும். இதில் ஏதேனும் ஆட்சேபணையிருந்தால் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு பம் மாத்து செய்கிறது.

இயற்கை வளம் கொஞ்சும் கடற்கரையை பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் கேளிக்கை விடுதிகளுக்கும், சிறப்பு பொருளா தார மண்டலங்கள் என்ற பெயரில் சூறையாட வரும் பன்னாட்டு நிறு வனங்களும் ஏற்கெனவே தீர் மானிக்கப்பட்டுள்ள சதி திட் டத்தை அமலாக்கவே, பழைய சயனைடு புதிய குப்பியில் வரு கிறது. இந்த அறிவிப்பாணை சுனாமி, புயல், சூறாவளி போன்ற பேரிடர்களைக் காட்டிலும் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் பெரும் பேரிடராகும்.

ஆரம்பத்தில் கடலோரப் பகுதி யில் சுற்றுச்சூழல் அழிவிலிருந்து பாதுகாக்கவே கடலோர ஒழுங் கமைவு மண்டல 1991 அறிவிப் பாணை கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தளங்கள், கேளிக்கை விடுதிகள், இறால் பண்ணைகள், மணல் குவாரிகள் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பாணை தொடர்ந்து 23 முறை தளர்த்தப்பட்டது. நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. மேலும் பன்னாட்டு மூலதனத்திற்கு ஆதர வாக சிறப்பு பொருளாதார மண் டலங்கள் கடலோரங்களில் கொண்டு வருவதற்காக மத்திய அரசு வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதன் குழு அமைத்து புதிய பெயரில் கடலோர மேலாண்மை மண்டலம் 2008 அறிவிப்பாணை யை கொண்டு வந்தது. மீனவ அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர் வலர்களும், தொழிற்சங்கங்களும் இதனை கடுமையாக எதிர்த்தன. தமிழ்நாடு தவிர கேரளா உள்ளிட்ட அனைத்து கடலோர மாநில அரசு களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித் தன. வேறு வழியின்றி மீண்டும் எம். எஸ்.சுவாமிநாதன் தலைமையில் மூவர் வல்லுநர்குழு 2009 ஜூன் 15ல் அமைக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆய்வு நாடகத்தை நடத்தி யது. 2009 ஜூலை 16ல் 2008 அறி விப்பாணையை நடைமுறைப் படுத்தாமல் காலாவதியாக விட்டு விடலாம் என்று வல்லுநர்குழு பரிந் துரைத்தது. 1991 அறிவிப்பாணை யை பலப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சட்டம் வேண்டும் என்றும் முன் மொழிந்தது.

சிஆர்இசட் 1991 அறிவிப் பாணையின் (மூலவடிவின்) படி கடலோரத்தில் தடை செய்யப்பட்ட செயல்பாடுகள்

* அனைத்து வகையான புதிய தொழிற்சாலைகள் அமைப்பதும், இருக்கின்ற தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள்.

* இடர்விளையக்கூடிய பொருட்களை அகற்றுதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகள்.

* மீன் பதப்படுத்தும் தொழில் கள் நிறுவுதல் மற்றும் விரிவுபடுத்துதல்.

* அனைத்து வகையான கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருள்கள் அகற்றும் நடவடிக்கைகள்.

* தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுப்பொருட்களைக் கடலில் கலத்தல்.

* நகரங்களின் கழிவுப்பொருட் கள், ஆலைகளின் திடக் கழிவுகள், மென் சாம்பல் போன்ற பொருட் களை பள்ளத்தை நிரப்புவதற்காக கடற்கரைப் பகுதியில் இருப்பு வைத்தல் போன்ற நடவடிக்கைகள்

* அனல்மின் நிலையங்கள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல் மற்றும் இதர கழிவுகளை கொட்டி வைத்தல்.

* நிலம் மீட்புப் பணி, வரப்பு அமைத்தல் அல்லது கடல்நீரின் இயல்பான வளத்தைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகள்.

* மணல் வாருதல், பாறை களைத் தோண்டுதல் மற்றும் இதர நிலத்தில் பொருட்களை தேடுதல்.

* உயர் பேரலை வரிசையி லிருந்து (ழகூடு) 200 மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பதற்கான கட்டுமானங்கள்

* கடற்கரை ஒழுங்கமைவு மண்டலம் பகுதியைப் பொருத்த வரை இந்த அறிவிப்பாணையின் 8வது பத்தியில் கூறப்பட்டுள்ள கட்டுமான நடவடிக்கைகள், இதர நடவடிக்கைகள் அனைத்தும்.

* உயர் பேரலை வரிசை மற்றும் கீழ் பேரலை வரிசை வரிசை களுக்கு இடைப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள்.

* கடல் மணல் குன்றுகள், தேரி கள் மற்றும் இயற்கை அமைப்பு களை அழகுபடுத்தும் நடவடிக்கைகள்.

* முன்னேற்றங்கள் தடை செய் யப்பட்ட பகுதிகளிலும் மீனவ சமூகங்களின் குடியிருப்புகளை, கடலோர முறைப்படுத்துதல் அறிவிப் பாணை 1991 அனுமதிக்கின்றது.

இந்தியா நீண்ட கடற்கரையை கொண்ட நாடு, வாழும் மக்கள் தொகையில் 25 விழுக்காடு கடலும் கடல்சார்ந்த பகுதிகளில் வாழ்கின் றனர். ஒரு கோடிக்கும் மேலான மீனவ மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க 1991 அறிவிப்பாணை மூலவடிவில் பாது காக்கப்பட வேண்டும் என்பதே மீனவ மக்களின் கோரிக்கையாகும்.

மத்திய அரசோ கடலோர முறை மை மண்டல 1991 அறிவிப் பாணையை பலப்படுத்துகிறோம் என்று கூறி இதுவரை செய்யப்பட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் சட்டப்பூர்வமான செயல்வடிவம் கொடுக்கவே புதிய 2010 அறிவிப் பாணை வந்துள்ளது. மீனவ மக்க ளின் எழுச்சியால் தோற்கடிக்கப் பட்ட கடலோர மண்டல மேலாண் மை 2008 அறிவிப்பாணையின் பல பிரிவுகளையும் நியாயப்படுத்துகிறது.

1991 அறிவிப்பாணையை நடை முறைப்படுத்தி கண்காணிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உரு வாக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கடலோர மேலாண்மை அதிகார அமைப்புகளின் செயல்பாடுகளை யும், அதிகாரங்களையும் நீர்த்துப் போகச் செய்யும் புதிய நிர்வாக முறைகளை முன் மொழிகிறது.

டாக்டர் வா.மைத்ரேயன் தலை மையில் அமைந்த நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த முடிவுகளை யும், பரிந்துரைகளையும் நிராகரிப் பது நாடாளுமன்ற அவமதிப்பு செயலாகும்.

புதிய அறிவிப்பாணை 2010 அம லானால், பாரம்பரியமாக கடலோரத் தில் குடியிருக்கும் மீனவர்களையே ஆக்ரமிப்பாளர்களாக மாற்றியுள்ளது. கடலோரங்களில் தொழிற்சாலை கள், சிறப்பு பொருளாதார மண்டலங் களாக மாறினால் மாசுபடுதல் அதிகமாகும். கடல்அரிப்புகள் ஏற்படும், மீனவர் வாழிடங்கள் அழியும், அரியவகை உயிரினங்கள் மறைந்து போகும். பூர்வகுடி மீனவ மக்கள் தங்கள் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டு புலம் பெயரும் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள்.

கட்டுரையாளர், தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின்
மாநிலப் பொருளாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக