சனி, 9 அக்டோபர், 2010

ஊக பேர வர்த்தகத்தைத் தடை செய்க - -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் ‘‘பணவீக்கத்தின் எதிர்மறை விளை வுகளிலிருந்து சாமானியர்களைக் காப்பாற்றிட அரசை வலியுறுத்தி அவைத் தலைவர்களே கொண்டு வந்த தீர்மானத்தின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு இரு அவைகளி லும் விவாதங்கள் நடைபெற்ற போதிலும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருப்பது தொடர்கிறது. சாமா னிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் கடுமையான முறையில் சீர்குலைந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கம், பணவீக்க அட்டவணைக் காக புதிதாக ஒரு தொகுப்பை 2004-05ஆம் ஆண்டை ‘அடிப்படை ஆண்டாகக்’ கொண்டு, வெளியிட்டிருக்கிறது. புள்ளிவிவரங்களில் அதிகமானவற்றை மறைக்கும் விதத்திலும், பொருளாதாரம் தொடர்பாக கவர்ச்சிகரமான சித்திரத்தை மக்களுக்கு வழங்குவதற்காகவும் அரசாங்கம் விலைவாசி அட்டவணை எண் களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆயினும், உணவுப் பணவீக்கம் 2010 செப்டம் பர் 4ந்தேதியுடன் முடிவடையும் வாரத்தில் 15.10 விழுக்காடு உயர்ந்திருக்கிறது, தொடர்ந்து மூன்று வாரங்களாக உணவுப் பணவீக்கத்தின் விகிதம் உயர்ந்து கொண்டிருக்கிறது. தானியங் களின் விலைகள் 7.16 விழுக்காடும், பருப்பு வகைகளின் விலை 6.10 விழுக்காடும் உயர்ந் திருக்கிறது. கோதுமை விலை 10.16 விழுக் காடும், அரிசி 5.74 விழுக்காடும் உயர்ந்திருக்கிறது. பால் 23.41 விழுக்காடும், காய்கறிகள் மற் றும் பழங்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன.

விலைவாசியைக் கட்டுப்படுத்திடக் கோரி நடைபெற்ற பல்வேறு எதிர்ப்பு நடவடிக் கைகளின் போதும், நாடாளுமன்றத்தில் நடை பெற்ற விவாதங்களின்போதும், நாம் முன் வைத்த பல்வேறு கோரிக்கைகளில், ஊக வணிகத்தின் மூலம் ஏற்படும் உணவுப் பண வீக்கத்தைத் தடுத்திட அத்தியாவசியப் பொருட்களின் மீதான முன்பேர/ஊக வர்த் தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும். மத்திய நிதி அமைச்சர், பதில் அளிக்கையில், இப்பிரச்சனை ஆராயப்பட்டு, தேவைப்பட்டால், குறைந்தபட்சம் தற்காலிக மாகவாவது இத்தகைய நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்தார். ஆயினும், இது தொடர்பாக இதுவரை உருப்படியான நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை.

இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில் லை. ஏனெனில் இத்தகைய நடவடிக்கை யானது ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் முன் வைத்த வாதங்களையெல்லாம் அரசு கடந்த காலங்களில் எப்போதும் கண்டுகொள்ளவே இல்லை. ‘‘பணவீக்கத்திற்கு இவை காரணம் அல்ல’’ என்று கூறி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மழுப்பிவிட்டது. ஆனால் நாம் முன்வைத்த வாதங்கள் மிகவும் சரி என்பதை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஒரு குழுவை நிய மித்தது. அக்குழுவானது, ஐ.நா. சபைக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அக்குழு 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏற்பட்ட உணவு நெருக்கடியையும் அடிப்படை உணவுப் பொருள்களின் விலைகளில் ஊகவர்த்தகம் ஏற்படுத்திடும் தாக்கத்தையும் ஆய்வு செய்தது. பின்னர் அக்குழுவின் தலைவர், ‘‘விலைவாசி உயர்வுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலை உயர் வுக்கும் ஊக வர்த்தகமே முக்கிய காரணி யாகும்’’ என்று கூறி இருக்கிறார்.

‘‘குறிப்பாக, உணவுப் பொருட்கள் மீதான சந்தைகளில், ‘விவசாய சந்தை அடிப்படை’ களில் சம்பந்தமே இல்லாத ஹெட்ஜ் நிதியங்கள் (ாநனபந கரனேள), பென்ஷன் நிதியங்கள் (யீநளேiடிn கரனேள), முதலீட்டு வங்கிகள் (inஎநளவஅநவே யெமேள) போன்ற பகாசுரக் கம்பெனிகள் பல புகுந் திருப்பது விலைகளைக் கடுமையாக உயர்த்தி யிருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினைச் செய்திருப்பதாக நம்புவதற்குக் காரணமிருக் கிறது. பொருள்களின் விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ண யம் செய்யப்பட்டுவந்த விலைவாசி முறையை இது மாற்றி அமைத்துவிட்டது. எனவே, மற் றொரு முறை, உணவுப்பொருள்களின் விலை களில் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் உலக நிதித்துறையில் அடிப்படை சீர்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.’’

இதுதான் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. விலைகள் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு உயர்ந்திருப்பதற்கு இவைதான் காரணங்களாகும். விவசாயப் பொருட்களின் மீது ஊக வணிகத்தின் அடிப்படையில் நடை பெற்றுள்ள வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ஒவ் வோராண்டும் உயர்ந்துகொண்டே வந்திருக் கிறது. 2009 ஏப்ரல் 1ல் இருந்ததைவிட 2010 ஜனவரி 31ல் இது 102.59 விழுக்காடு அதி கரித்திருக்கிறது. சரியாக ரூபாய் மதிப்பீட்டில் சொல்வதென்றால், 10,13,379.97 கோடி ரூபாய்க்கு இது நடைபெற்றிருக்கிறது. இப்போது பொருட் கள் சந்தைக்கு வரும்போது இருக்கும் விலை யை விட விற்கும்போது அதிகமாக இருந்தால் தான் லாபம் ஈட்ட முடியும். விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தால்தான் கொள்ளை லாபம் ஈட்டமுடியும். எனவேதான் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வர்த்தக சூதாடிகள் விலைகளை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அதன் காரணமாக மக்கள் அதிக விலைகொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதேபோன்று உலக அளவில் 2007-08ஆம் ஆண்டில் விலைகள் உயர்ந்ததை ஐ.நா. அறிக்கை விவரிக்கிறது. ‘‘ஊக வர்த்த கம் உணவுப் பொருட்களின் சந்தைகளில் அனுமதிக்கப்பட்ட போதுதான் முதலாவதாக கடுமையான விலைவாசி நெருக்கடி ஏற்பட் டது’’ என்று அறிக்கை தெரிவிக்கிறது. 1998 இல் 440 பில்லியன் டாலர்களாக இருந்த அதன் மதிப்பு, 2002இல் 770 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது, பின்னர் அது 2007 ஜூனில் 7500 பில்லியன் டாலர்களாக தாவிக் குதித்தது.

அமெரிக்காவில் செயல்பட்டுவந்த லேமன் சகோதரர்கள் (டுநாஅயn க்ஷசடிவாநசள) நிறுவனம் திவாலாவதற்குச் சற்றுமுன் உணவுப் பொருட் களின் மீதான ஊக வர்த்தகம் குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2003க்கும் 2008 மார்ச்சுக்கும் இடையே இது 1900 விழுக்காடு அதிகரித்திருப்பதை அது வெளிப்படுத்தியது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது 13 பில்லியன் டாலர்களிலிருந்து 317 பில்லியன் டாலர் களாகும். இந்தப் பின்னணியில்தான் வர்த்த கம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. மாநாடு (ருசூஊகூஹனு-ருnவைநன சூயவiடிளே ஊடிகேநசநnஉந டிn கூசயனந யனே னுநஎநடடியீஅநவே.) தன் 2009ஆம் ஆண்டு அறிக் கையில், ‘‘இவ்வாறு பொருட்கள் வர்த்தகத் தில் மிகப் பெரிய அளவில் நிதிமூலதனம் செலுத்தப்பட்டிருப்பதானது, பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்றி யுள்ளன. இதற்குமுன் விலைவாசியை நிர்ண யிப்பதில் இருந்த சந்தை அடிப்படைகளை எல்லாம் சம்பந்தமற்றவைகளாக்கிவிட்டன,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வாறு ஊக வணிகத்தை விவரிக்கும் அறிக்கை மேலும், ‘‘பொருளை வாங்குபவர், எதிர்காலத்தில் அதற்கு மேலும் அதிக விலை கொடுக்க விருப்பத்துடன் இருக்கிறார் என் பதன் பொருள், எதிர்காலத்தில் அதன் விலை மேலும் உயரும் என்பதேயாகும். எனவே, எதிர் காலத்தில் பொருளின் விலை உயரும் என்று சொல்வது, பங்குச் சந்தைகளில் பொருட் களை விற்பவர்களை, பொருள்களின் விலை களை உயர்த்திக்கொள்வதற்கு சமிக்ஞை காட்டுவது போலாகிறது.’’ என்று தெரிவிக் கிறது. உண்மையில், சிகாகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்ச்-இல் நிர்ணயிக்கப்பட்ட தானி யங்களின் எதிர்கால விலைகள் உலகம் முழு வதும் நடந்து வந்த தானிய வர்த்தக ஒப்பந்தங் களை நேரடியாகப் பாதித்தது. மேலும், ஊக வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர், மற்ற முதலீட் டாளர்களைப்போல் புதிய மூலதனம் எதையும் உருவாக்கப் போவதில்லை. ஊகவர்த்தகர் திவாலாகப் போகிறார் என்றால், அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் எந்தத் தொகையையும் அவரிடமிருந்து மீண்டும் பெற முடியாது.

இவ்வாறு உணவுப்பொருள்களின் மீதான பணவீக்கத்திற்கும், சந்தை அடிப்படை களுக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்ப தால், ஐ.நா. ஸ்தாபனத்தின் இந்த அறிக்கை யானது, சர்வதேச நிதியத்தில் ஜார்ஜ் புஷ்சால் முன்வைக்கப்பட்ட ‘‘சீனாவிலும் இந்தியா விலும் உணவுதானிய நுகர்வு அதிகரித் திருப்பதுதான் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம்’’ என்ற கூற்றை யும் போலித்தனமான ஒன்று என்பதை உலகிற்கு வெளிப்படுத்திவிட்டது.

உண்மையான வர்த்தகர்களுக்கும் ஊக வர்த்தகர்களுக்கும் இடையே சட்டரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திட வேண்டும் என்பது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந் துரைகளில் முக்கியமான ஒன்றாகும். மக்க ளுக்கு உணவு உரிமையை அளிக்கக்கூடிய விதத்தில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் ஒவ் வொரு நாடும் தன்னுடைய சட்டரீதியான கட மைகளை நிறைவேற்றிட, இப்பரிந்துரைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டிருக்கிறது.

சாமானியர்களின் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்றால், நாடாளுமன்றத் தின் ஒட்டுமொத்த உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்றால், ஐமுகூ-2 அரசாங்கமானது, உணவுப் பொருட்கள் பரிவர்த்தனைகளில் செயல் பட்டு வரும் அனைத்துவிதமான ஊக வர்த்தகங்களை யும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக