ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அயோத்தி: ஆர்எஸ்எஸ்-காரரின் பொய்யும் புரட்டும் - அருணன்

‘தினமணி’யில் (23.9.2010) இல.கணே சன் அயோத்தி பிரச்சனை பற்றி ஒரு கட் டுரை எழுதியிருக்கிறார். அதில் துவக்கத்தி லேயே ‘நான் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் காரன்” என்று சொல்லியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இது மட்டுமே, உண்மை. மற் றவை எல்லாம் பொய்களால் கட்டப்பட்ட விஷமத்தனம்.

‘பாபர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோவிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்’ என்று வினோதமாக எழுதியிருக்கிறார். அதாவது ஏற்கெனவே அங்கிருந்த ராமர் கோவிலைத்தான் பாபர் மசூதியாக மாற்றியமைத்திருந்தார் என்பது போலக் குறிப்பிடுகிறார்.

விஷயம் என்னவென்றால், அயோத்தி யில் இந்த இடத்தில் ராமர் கோவில் பாபர் காலத்தில் இருந்தது என்பதற்கே எவ்வித வர லாற்று ஆதாரமும் இல்லை. பாபரின் ஆணைப்படி மீர்பகி என்பவரால் அந்த மசூதி கட்டப்பட்டது என்றும், 1528-29ல் கட் டப்பட்டது என்றும்தான் அங்கு கண்டெடுக் கப்பட்ட கல்வெட்டுகள் கூறுகின்றன. ராமர் கோவிலை இடித்து அந்த மசூதி கட்டப் பட்டதாக எந்தப் பதிவும் இல்லை.

பாபர் தனது வாழ்க்கை வரலாற்றை எழு தியிருக்கிறார். அது, ‘பாபர் நாமா’. அதில் மசூதி கட்டப்படுவதற்கு முதல் ஆண்டுதான் அயோத்தி சென்றது பற்றி கூறியிருக்கிறார். ஆனால், ராமர் கோவில் பற்றியோ, அதை இடித்து மசூதி கட்ட உத்தரவிட்டது பற் றியோ ஏதும் கூறவில்லை. இல.கணேசன் கூறுவதுபோல அதை ‘வெற்றிச் சின்ன மாகக்’ கருதியிருந்தால் நிச்சயம் பெருமை யாகக் குறிப்பிட்டிருப்பார் தனது சுயசரிதை யில்.

உண்மை என்னவென்றால், தனது மகன் ஹுமாயூனுக்கு பாபர் எழுதிய கடிதத்தில் ‘எந்தவொரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத் தையும் நீ சிதைக்கக் கூடாது’ என்று திட்ட வட்டமாக அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கடி தம் இப்போதும் போபால் அரசு நூலகத்தில் பாது காக்கப்பட்டுள்ளது. இப் படிப் புதல்வனுக்கு புத்தி சொன்னவர், தானே கோவிலை இடித்து மசூதி கட்டியிருப்பார் என்பது சிறிதும் நம்பக் கூடியது அல்ல.

துளசிதாசர் தனது ராமாயணத்தை 1576 - 79ல் எழுதி முடித்தார். அவர் கம்பரைப் போன்ற வர் அல்ல, சரியான வரு ணாசிரமவாதி. தனது காலத்திய சூத்திர ஞானிகளை எல்லாம் தனது படைப்பில் கேலி செய்திருக்கிறார். இப்படிப்பட்டவர் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப் பட்டது என்றால் சொல்லாமல் விடுவாரா? சொல்லவில்லை, கோடி கூடக் காட்ட வில்லை. அது மட்டுமல்ல, ‘தீர்த்தராஜ்‘ என்று - தீர்த்த யாத்திரைக்கான பிரதான இடம் என்று - பிரயாகையைக் கூறியிருக் கிறாரே தவிர, அயோத்தியை அல்ல. அங்கே ராமர் கோவில் இருந்திருந்தால் அதையல் லவா தீர்த்த ராஜ் என்று கூறியிருப்பார்.

அக்பரின் நண்பர் அபுல் ஃபசல் எழுதிய ‘ஆயினி அக்பர்’ ஒரு பெரும் கலைக் களஞ் சியம். அதை அவர் 1598ல் எழுதினார். இந் துக்களின் புனித யாத்திரைக்கான இடங் களில் ஒன்று என்று அயோத்தியைக் கூறி யிருக்கிறாரே தவிர, அங்கே ராமருக்கு கோவில் இருந்ததாகவோ, அதை இடித்து விட்டுத்தான் அல்லது இல.கணேசன் கூறு வது போல மாற்றியமைத்துத்தான் மசூதி கட்டப்பட்டதாகவோ கூறவில்லை.

அபுல் ஃபசலுக்குப் பிறகு சரியாக 160 ஆண்டுகள் கழித்து ராய் சதுர்மான் என் பவர் ‘சகர் குல்ஷன்’ எனும் நூலை எழுதி னார். அதிலும் அயோத்தி பற்றி வருகிறது. ஆனால், ராமர் கோவில் பற்றியோ, அது இடிக்கப்பட்டது பற்றியோ ஏதும் இல்லை.

ஆக, விஷயம் இதுதான். அயோத்தியில் ராமர் கோவில் இடிக்கப்படவில்லை அல் லது மாற்றியமைக்கப்படவில்லை. காரணம் இருந்தால் தானே இடிக்க அல்லது மாற் றியமைக்க! கோவில் இருந்ததாக இட்டுக் கட்டப்பட்டது எல்லாம் பிற்காலத்து வேலை கள், இந்து மதவெறியர்களின் கைங்கரியங் கள்.

இதை அப்படியே மறைத்துவிட்டு அங்கே ராமர் கோவில் இருந்ததாக அடித்து விடு கிறார் இல.கணேசன். இதிலே அவர் செய் கிற திருகுதாளம் என்னவென்றால் பாபர் உத்தரவால் கட்டப்பட்ட மசூதி. ‘அந்நி யனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடி மைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக் கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடி மைச்சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்’ என்பது. இங்குதான் அவரின் விஷமத்தனம் உள்ளது.

இதில் முதல் அம்சம், பாபர் மசூதியை சங் பரிவாரம் தகர்த்து தரைமட்டமாக்கியது சரியே என்கிற அவரின் அகங்காரம். அந்தக் கிரிமினல் வேலையைச் செய்தவர்களுக்கு இன்னும் சட்டப்படி தண்டனை தராததால் வந்த அகங்காரம். பாபர் அந்நிய பூமியிலி ருந்து வந்திருக்கலாம். ஆனால், வந்தவர் இந்த நாட்டிலேயே தங்கி, இந்த மண் ணையே தனது சொந்த மண்ணாகக் கருதத் துவங்கினார், அவரது வாரிசுகளும், அப்ப டியே வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை அப்படியே மறைக்கிறார். அதன்மூலம் தங் களது கிரிமினல் வேலையை நியாயப்படுத் துகிறார்.

இரண்டாவது அம்சம், இது பாபர் உத்த ரவால் கட்டப்பட்டது என்றாலும் அது இங் குள்ள முஸ்லிம்களுக்காகக் கட்டப்பட்ட தொழுகை இடம் என்கிற யதார்த்ததைத் திட் டமிட்டு மறைப்பது. கட்டியவர் வெளியிருந்து வந்திருக்கலாம், ஆனால், அதைக் காலங் காலமாக பயன்படுத்தியவர்கள் இந்தியா வின் முஸ்லிம்கள். அவர்கள் எல்லாம் வெளி யிலிருந்து வந்தவர்கள் அல்ல என்பதை இல.கணேசனும் ஒப்புக் கொள்கிறார். அப் படியென்றால் அவர்களுக்குப் புனிதமான இடம் எப்படி இந்தியர்களின் ‘அடிமைச் சின்னம்’ ஆகும்?

இங்குதான் ஆர்எஸ் எஸ்-ஸின் அந்த நாசகா ரச் சிந்தனை தனது கோர முகத்துடன் வெளிப்படு கிறது. அதாவது, இந்துக் களுக்கு மட்டுமே இந்தியா சொந்தம், பிற மதத்தவர் எல்லாம் இரண்டாந்தரக் குடிமக்களே, அவர்களுக் கான வழிபாட்டுத் தலங் கள் எல்லாம் ‘அடிமைச் சின்னங்களே’, அவற்றை இடிப்பதில் தவறு இல்லை! இந்த அநியாயச் சிந்தனை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பெருங் கேடு விளைவிப்பது, சர்வநாசம் செய்வது.

இந்தியா அதன் குடிமக்கள் அனை வருக்கும் சொந்தம். அவர்கள் எந்த மதத்தை யும் பின்பற்றலாம் அல்லது எந்த மதமும் வேண்டாம் என்றிருக்கலாம். அது அவர் களின் தனிப்பட்ட விருப்பம். இந்திய அரசோ மதச்சார்பற்றது, அதாவது, எந்த மதத்தோடும் தன்னைச் சம்பந்தப்படுத்தாதது. அதனா லேயே அதன் கீழ் சகல இந்தியர்களும் ஒன்று பட்டு நிற்கிறார்கள். இதை உணர்ந்துதான் ‘மதச் சார்பற்ற அரசு’ என்பது நமது அரசியல மைப்புச் சட்டத்திலேயே ஏற்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக வேலை செய்கிறது சங் பரிவாரம். அதன் நேரடிப் பிரதிநிதி இல. கணேசன். அயோத்தி நிலப் பிரச்சனை பற் றிய நீதிமன்றத் தீர்ப்பு வரவிருக்கிற சூழலில் அவர் இப்படி எழுதியிருப்பது உள்நோக்கம் உடையது, சிறுபான்மையோரின் மனசைப் புண்ணாக்குவது. இத்தகைய வெறிப் பிரச் சாரத்திற்கு ‘தினமணி’ ஏடும் மேடை அமைத்துத் தருவது வேதனைக்குரியது.

எனினும், தமிழக மக்கள் இவர்களது சதி வேலைகளுக்கு இரையாகக் கூடாது. மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதில் மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் உறுதியாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நீதிமன்றத் தீர்ப்பு எப்படி யிருந்தாலும் இறுதி வெற்றி நியாயத்திற்கே, வரலாற்று உண்மைக்கே என்பதில் சந்தேகம் வேண்டாம். அமைதி காப்போம், மக்கள் ஒற்றுமையை பேணுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக