சனி, 25 செப்டம்பர், 2010

வள்ளுவரின் பொருளுடைமை நீதி - கே.முத்தையா

குடிகளைப் பாதுகாக்கும் மன்னவன் திருக்குறளில் தெய்வீகத் தன்மைக்கு -புனிதத் தன்மைக்கு உயர்த்தப்படு கிறான்! இந்த குடிகள் யார்? எப் படிப்பட்ட குடிகளை காக்கவேண்டும் என்று கோருகிறார்?

இதன்விளக்கம் ‘குடிமை’ - ‘குடி செயல்வகை’ என்ற அத்தியாயங் களில் காணப்படும் குறள்களைவிட ‘விருந்தோம்பல்’ என்ற அத்தியா யத்தில் சிறப்பாகக் கூறப்பட் டுள்ளது.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

குடியாக வீட்டில் வாழ்ந்து, பொருள்களைக் காத்து இல் வாழ்க்கை நடத்துவதெல்லாம் எதற்காகத் தெரியுமா? விருந்தினரைப்போற்றி உதவி செய்வதற்காகவே!

இந்தக் கருத்து மேலும் விளக்கப்படுகின்றது.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து
பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

வந்த விருந்தினர்களைப்போஷித்து அனுப்பிய தோடு, இனி வரப்போகும் விருந்தினர்களுக்காகக் காத் திருப்பவர் வானத்திலிருக்கும் தேவர்களின் விருந்தி னர்களாக வரவேற்கப்படுவர்.

வானுலகத்திலுள்ள தேவர்களால் ஒருவன் விருந் தினனாக வரவேற்கப்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவன் எப்படி இருக்க வேண்டும்?

வற்றாத வளமுடையோனாக இருக்க வேண்டும். வருவோர்க்கெல்லாம் வாரிவாரி வழங்கிடும் செல்வந்த னாக இருக்க வேண்டும். செல்வந்தனாக இருப்பது பிற ருக்கு உதவி செய்யவே! அப்போதுதான் வானவர்க்கும் விருந்தினராவான்! அதாவது மோட்சமடையும் வழி அது. இவ்வாறு செல்வம் சேர்ப்பவனே சிறந்த குடி என்கிறது வள்ளுவம். ‘அருளுடைமை’ என்ற அத்தியாயத்தின் கீழ் இக் கருத்து ஐயத்திற்கிடமின்றி மேலும் தெளிவாக் கப்படுகிறது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருளில்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்க் கையே இல்லை என்பதுபோல, உயிர்களிடத்தில் கருணை யில்லாதவர்களுக்கு மறு உலகத்தில் வாழ்க்கை இல்லை என்பதே இதன் பொருள்.

எதார்த்த வாழ்க்கையின் உண்மையைத் தெளிவாகக் கூறி விடுகிறார் வள்ளுவர். இந்த உலகத்தில் பொரு ளில்லை எனில் வாழ்வில்லை என்று கூறிவிடுகிறார்.

முப்பெரும் குறட்பிரிவில் முக்கியமான பகுதிக்கு ‘பொருட்பால்’ என்று பெயர் சூட்டியிருப்பதன் பொருள் இதுதான். இதனை ‘பொருள் செயல் வகை’ என்ற தலைப்பின் கீழ் சிறப்பானதொரு அதிகாரத் தில் விளக்குகிறார். வள்ளுவர் ஓர் எதார்த்த வாதி. அன்றைய சூழ்நிலையில் யாருக்காக வாதாடுகிறார் என்பதையும் தெளிவாக்கி யுள்ளார்.

பொருள் சேர்த்திடும் ‘புனிதமான’ வழிகளை, எடுத்துக்கூறுகிறார்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

நல்ல வழியில் நின்று சேர்த்தபொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும் என்கிறார்..

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

அன்பிலிருந்து பிறந்திடும் அருள், பொருள் என்று சொல்லப்படும் செவிலித்தாயால்தான் வளரமுடியும்; பொருள் இல்லை என்றால் அருள் இல்லை என்று பொருள். ஆகவே பொருள் சேர்த்துக் கொள்வது அன் பிற்கும், அருளுக்கும், அறத்திற்கும், இன்பத்திற்கும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளது.இவ்வாறு பொருள் சேர்த்தலுக்கு ஒரு புனிதத் தன்மை வழங்கி, பொருளினால் ஆகக் கூடிய காரியங்களை எல்லாம் மேலும் விளக்குகிறார்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்.

பொருளைப் போதிய அளவு சேர்த்துக் கெள்க. அது பகைவரின் செருக்கு அடக்கக் கூர்மையான வாள் போன்ற தாகும். பகைவரின் செருக்கை அடக்கி ஆள்வதற்குப் பொருள் தேவை. வெறும் தர்மோபதேசம், நீதி உப தேசம் போதாது.பொருள் தேவை என்று சொல்லாமல் சொல்லி விடுகிறார்.

சிறந்த குடி என்பது எது? யார்?பொருளுடைய ஒரு வனே சிறந்த குடிமகன். இப்படிப்பட்ட குடிமகனைப் பாதுகாக்கும் அரசன் தெய்வத்திற்கு ஒப்பானவன். இப் படிக் குடிகளைப் பாதுகாத்து அரசாள்பவனே புனித மானவன்- உயர்ந்தவன்- சிறந்தவன்- தர்மத்தின் வழி செல்பவன். பொருளைப் பாதுகாப்பவன் - புனிதமான வன், அத்துடன் பொருளுடைமையும் புனிதமானது என்பதை வள்ளுவர் இவ்வளவு சிறப்பாகக் கூறுவதன் மூலம் பொருளுடைமையாளருக்கு நியாயத்தன்மை, புனிதத் தன்மை உருவாக்கப்படுகிறது.

தனி உடைமை என்பது அரசியல் சட்டத்தில் அடிப் படை உரிமையாக இருக்கக்கூடாது என்று கூறுகின்ற அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திய உயர்ந்த நீதியான சோஷலிச உணர்வுக்கும், வள்ளுவர் காலத்திய பொருளுடைமை பற்றிய நீதிக்கும் எவ் வளவு பெரும் வேறுபாடு? வளர்ச்சி? எனினும் அது தான் வள்ளுவர் காலத்திலிருந்த தர்ம நீதி! ஏன், இன்றும் கூட இத்தகைய நீதியைத்தான் உடைமை வர்க்க நீதி மான்கள் உபதேசிக்கிறார்கள்!

(ஜூன்-10 தோழர் கே.முத்தையா நினைவு நாள்)
-சமுதாய வாழ்வில் குறளின் குரல் என்ற நூலிலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக