சனி, 25 செப்டம்பர், 2010

பட்டினப்பாலை காட்டும் மகளிர் - சுந்தா

சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன் றாக விளங்கும் பட்டினப்பாலை என் னும் நூல், கடியலூர் உருத்திரங் கண் ணனாரால் இயற்றப்பட்டதாகும். 301 வரி களைக் கொண்டது. வரலாற்று ஆய் வாளர்களுக்கும், சமூகவியல் நோக்கர் களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக் கும் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர் களுக்கும் மிகவும் விருப்பமானதும், பயன்தரத்தக்கதுமான நூல்களில் பட்டினப்பாலையும் ஒன்று ஆகும். உள்ளதை உள்ளபடியே காட்டுவது சங்க இலக்கிய நூல்களில் காணப் படும் பெரும் வழக்காகும்.

கரிகால் பெருவளத்தான் ஆண்ட காவிரிப்பூம்பட்டினத்து நிலப்பரப்பை நயம்படக் குறிப்பிடுகிறது பட்டினப் பாலை. நெடு வஞ்சிப் பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தமிழ் நடை இனிமையானது.எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாதது. காவிரியின் சிறப்பை பாடல் துவக்கமாக அமைத் துக் கூறும்போது, வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற் காவிரி என்று காவிரி பாய்கிற வெள்ளப் பெருக்கு போல் மொழிநடையும் இருப் பது கண்டு மகிழமுடியும். இப்படி நூல் முழுவதும் படித்து ரசிக்கக் கூடிய வரி கள் ஏராளம். தமிழின் மிகப் பெரிய கரு வூலத்தில் இந்நூலும் ஒன்று.

நெற்கதிர்களைத் தின்று வயிறு பெருத்துக்கிடக்கும் எருமைக் கன்று களும் கரும்பாலைகளும் தென்னை, கமுகு வாழை, மஞ்சள், பனை, சேம்பு இஞ்சி, மாமரங்கள் போன்றவையும் பரந்து கிடக்கும் பாக்கம் என்று அழைக்கப்படும் சிற்றூர் வளத்தை அழகுறக் கூறுகிறார். ஒழியாது விளைச் சல் தரும் வயல்கள் என்று பொருள் தரும் விளைவு அறா வியன் கழனி என ஒரு வரியிலேயே ஊரின் மொத்த செழுமையையும் குறிப்பிடுகிறார் பாடலாசிரியர்.

அத்தகைய பாக்கத்தில் அகன்ற முற்றத்தினையுடைய விரிந்து பரந்த வீட்டில் உள்ள பெண்கள், நெல்லை உலர்த்திக் கொண்டிருக்கிறார்க ளாம். நெல்லை உண்ண வரும் கோழி களை விரட்ட தங்கள் காதணிகளைக் கழற்றி எறிகிறார்களாம். எப்படிப்பட்ட காதணிகள் என்றால் அவையெல் லாம் பொற்குழைகளாம். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் இத்தகைய பொற்குழை கள், அவர்கள் வீட்டுப் புதல்வர்கள் நடைவண்டி தள்ளிக்கொண்டு வருகை யில் தடுக்கிறதாம். இத்தகைய பகை தவிர வேறு எந்தப் பகையும் அவர்கள் அறியாதவர்கள் என்று செழுமையான குடிப்பெண்களைக் காட்டுகிறார்.
அகல்நகர் வியன் முற்றத்து
சுடர்நுதல் மடநோக்கின் நேர் இழை மகளிர்'
என்று செழுங்குடி மக ளிரை வருணிக்கிறார். இவர்கள் உழு குடிப் பெண்களாக இருப்பதற்கு வாய்ப் பில்லை. பொருள் உற்பத்தி உழைப் பிருந்து விடுபட்டு சூரியக்கதிர்களின் வெம்மை காணாத சுடர்நெற்றிப் பெண் களாகத்தான் இருக்க முடியும். உழவர் குடிப் பெண்களை பட்டினப்பாலை காட்சிப்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது. ‘வணிகர்களின் நடு நிலைக் குணம் குறித்து வேறொரு இடத் தில் கூற வந்த பாடலாசிரியர், உழ வர்களின் ஏர் நுகத்தடியில் உள்ள பக லாணி (நுகத்தடியின் நடுவில் உள்ள ஆணி) போல இருக்கிறார்கள் என்று உவமைப்படுத்துகிறார்’. கொடுமேழி நசைஉழவர் நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நல்நெஞ்சினோர், என்றும் தமவும் பிறவும் ஒப்ப நாடி என் றும் இன்னும் பலவாறாக வணிகர் களைச் சிறப்பித்துக் கூறும் பட்டினப் பாலை, உழவர் நிலை குறித்தும் அவர் தம் பெண்டீர் குறித்தும் ஏதும் கூற வில்லை. பட்டினப்பாலை வளமான சமூகப் பகுதியையே மிகவும் கவனத் தில் கொண்டிருந்தது என்பதனை ஆழ்ந்த வாசிப்பாளர் உணரமுடியும்.

மேலும் இனக்குழு சமூகத்தில் பால் சமத்துவம் இல்லாததை மடநோக்கின் என்றொரு சொல்லாட்சி காட்டிக் கொடுத்துவிடுகிறது. வீட்டிற்குள் அடைபட்ட பெண்டீராக சோழநாட்டுச் சிற்றூரைச் சேர்ந்த செழுங்குடிப் பெண்கள் இருந்து வந்துள்ளனர்.

எனவேதான் ஆண்களால் வரை யறுக்கப்பட்டு கூறப்படும் பெண்களுக் கான நான்கு வகை குணங்களில் ஒன் றான மடம் என்கிற சொல்லாடல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்து பரதவர் களைப்பற்றி மிகவும் விளக்கமாகக் கூறுகிறது பட்டினப்பாலை. சுறாமீன் கொம்பு நட்டு தாழை மலர்களை அணிந்த பரதவர்கள் வழிபாடு செய் கிறார்கள். முழுநிலா நாளில் கடலுக் குச் செல்லாது தமது துணையோடு இன்பம் துய்க்கிறார்கள். பரதவப் பெண் கள் பசுமையான தழை ஆடையை அணிந்தவர்களாக உள்ளனர். பைந் தழை மா மகளிர் என்று புலவர் குறிப் பிடுகிறார்.

இவர்களுடைய குடியிருப்பு சிறிய கூரையைக் கொண்டது. தூண்டில்கள் அவர்களது கூரை வீட்டைச் சுற்றிலும் சார்த்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். இது எப்படி இருக்கிறதென்றால் நடு கல்லைச் சுற்றி வேலும், கேடயமும் வைத்திருப்பார்களே, அதைப் போன்று இருக்கிறதாம். இவர்களுடைய குடிசை களுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் வெண்மணலில் வலையை உணர்த்தி யிருக்கிறார்கள். இத்தகைய குடிசை வாழ் பெண்கள் தங்கள் தலையில் வெண் கூதாளிப் பூக்களைச் சூடியிருக்கின்ற னர். இந்த வெண்கூதாளப்பூவானது தாழையின் அடியில் வளர்ந்தவையாம்.

முன்னர் வயல்சார்ந்த மருத நிலத் துச் செழுமையான குடும்பத்தைச் சேர்ந்த அகன்ற முற்றங்களை உடைய பெரிய வீட்டுப் பெண்களைப் பார்த் தோம்.

பரதவர் வாழ்வதோ குடிசைகளில் தழையாடைகளை அணிந்தவர்களாக உள்ளனர் அக்குடிசைப் பெண்கள். அதாவது செல்வச் செழிப்பின் குறியீ டான நேரிழை அணிகலன்களைக் காணாதவர்களாக உள்ளனர்.

காவிரி கடல் கலக்கும் பகுதியில் நீண்ட மணல் பரப்பு உள்ளது. கடலில் இருந்து இரவுப் பொழுதில் திரும்பும் பரதவர் தங்களது இருப்பிடத்தை அறிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடற்கரையோர மாட மாளிகைகளில் எரியும் விளக்குகள் உதவியாக உள் ளன. அவ்விளக்குகளை எண்ணிய படியே பரதவர்கள்வருகிறார்களாம். வந்தவர்கள் எங்கு தூங்குகிறார்கள் என்றால் கொள்ளிடத்து மணல் பரப் பில்தான். இவர்கள் எண்ணிக்கொண்டு வரும் எரிவிளக்குகள் பொருந்திய மாடமாளிகைகளில் என்ன நடக் கிறது? பெண்கள் கள் அருந்துவதை ஒதுக்கி மதுவை அருந்துகிறார்கள். பட்டுத் துணிக்குப் பதிலாக மெல்லிய ஆடையை உடுத்திக்கொள்கிறார் கள். இரவுப் பொழுதின் சேர்க்கைக் கேற்ப இம்மாற்றம் நடக்கிறது. போதைக் கிறக்கத்தில் மகளிரோ ஆணின் பூக்களை சூடிக்கொள்கிறார் கள். ஆண்கள் பெண்ணின் பூக்களை சூடிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியில் என்ன செய்கிறார்கள் என்றே தெரிய வில்லையாம். மீன் பிடிக்கும் உழைப் பில் ஈடுபட்ட ஆண்களோடு துணை உழைப்பில் ஈடுபடும் பரதவ மகளிர், பைந்தழை ஆடை மட்டுமே அணிய முடிகிறது. ஆனால் இவர்களின் உழைப் பினால் பெறும் பலன்களை அனுபவிப் போர் மாட மாளிகைகளிலும், பட்டாடை களை அணிந்தும், மது குடித்து களி யாட்டங்களில் ஈடுபடுவதுமான வேறு பட்ட வாழ்நிலையினை பட்டினப் பாலை காட்சிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக